'கிராண்ட் ப்ரி' செஸ்: வைஷாலி ஏமாற்றம்

கிராஸ்லோப்மிங்: 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீராங்கனை வைஷாலி தோல்வியடைந்தார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் 'டாப்----2' இடம் பிடிப்பவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்கலாம். இதுவரை முடிந்த 5 கட்ட போட்டிகளின் முடிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா (308.34 புள்ளி), இந்தியாவின் ஹம்பி (279.17) முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.
இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் தமிழகத்தின் வைஷாலி பங்கேற்கிறார். இதன் 5வது சுற்றில் வைஷாலி, சீனாவின் ஜினர் ஜு மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 59வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
ஐந்து சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் உக்ரைனின் அனா முசிசுக், சீனாவின் ஜினர் ஜு (தலா 3.0 புள்ளி) உள்ளனர்.

Advertisement