தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி பீஹாரில் கைது

புதுடில்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடன் தொடர்புடைய பப்பர் கல்சா பயங்கரவாதி ஒருவனை தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது செய்தது.
தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
காலிஸ்தான் பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசாருடன் ஒருங்கிணைந்து பீகாரின் மோதிஹாரியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த காஷ்மீர் சிங் கல்வாடியை கைது செய்தோம்.
இவன், நாபா சிறையில் இருந்து தப்பியதிலிருந்து, காஷ்மீர் சிங் ரிண்டா உட்பட காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. மேற்கொண்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை அகழாய்வு: நட்சத்திர அணிகலன்கள் கண்டடுப்பு
-
சத்தீஸ்கரில் ஆபரேஷன் சங்கல்ப் வேட்டை தீவிரம்: 31 நக்சல்கள் என்கவுன்ட்டரில் பலி
-
தமிழகத்தில் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம்: 14 இடங்களில் இன்று சதமடித்தது வெயில்!
-
போர் நிறுத்தம் தற்காலிகம் தான்; மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!
-
கார்கள் நேருக்கு நேர் மோதல்: குஜராத்தில் 3 சகோதரர்கள் உட்பட 5 பேர் பலி
-
அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட்டேன்: பெருமிதமாக சொல்கிறார் டிரம்ப்
Advertisement
Advertisement