சிலிண்டர் வந்துள்ளதாக கூறி 18 பேரிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது
கிருஷ்ணகிரி: சிலிண்டர் போட வந்ததாக கூறி, 18 பேரிடம் நுாதன முறையில் பண மோசடி செய்த வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன், தனியார் மருத்துவம-னையில் டாக்டராக பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் போனில் பேசிய நபர், தான் சிலிண்டர் வினியோகம் செய்-பவர் என்றும், உங்கள் வீட்டிற்கு சிலிண்டர் வந்துள்ளது. அதற்-கான தொகையை கூகுள்பே மூலம் அனுப்புங்கள் என கூறினார். அதை நம்பி மணிகண்டனும் அனுப்பினார். ஆனால் மணி-கண்டன் வீட்டிற்கு எந்த சிலிண்டரும் வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் மணிகண்டன் புகார் செய்தார்.
இது குறித்து விசாரிக்க ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் உத்தர-விட்டார். விசாரணையில், மணிகண்டன் ஜி.பே., மூலம் தொகை அனுப்பப்பட்ட எண், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பெரிய பனமுட்லுவை சேர்ந்த பெருமாள், 24, உடையது என தெரிந்தது.
அவர், இதேபோல தர்மபுரி, சேலம், திருச்சி உள்பட பல பகுதி-களில், 18-க்கும் மேற்பட்டவர்களிடம் சிலிண்டர் பாய் என கூறி, பணத்தை நுாதன முறையில் பெற்றதும் தெரிந்தது.
இதையடுத்து, பெருமாளை போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு
-
முதுமலை யானைகள் முகாமில் விழா; ரூ.13 கோடி திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
-
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு
-
பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும்; இணையத்தில் டிரெண்டிங்
-
அரசு நிதியில் ரூ.80 லட்சம் மோசடி: ஒடிசாவில் 5 வனத்துறை அதிகாரிகள் கைது
-
ஆபரேஷன் சிந்துார் வெற்றி; அறுபடை வீடுகளில் ஆந்திரா மாநில எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு வழிபாடு