பராசக்தி பள்ளிக்கு பெற்றோர் பாராட்டு
பேரையூர்: பேரையூர் தாலுகா எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
மாணவிகள் தாரணி 571. ரக்ஷணா வைஷ்ணவி 568. சவுமியா 568. முகமது தனிஷ்க் 565. கனிஅமுதா 565, பயாலஜியில் 20 மாணவர்கள் உட்பட 40 மாணவர்கள் பாடவாரியாக 'சென்டம்' பெற்றனர். இவர்களை பள்ளித் தாளாளர் ஜெகதீசன் பாராட்டினார். கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிளஸ் 2 தேர்வில் சென்டம் அடித்து சாதனை படைத்ததால் பள்ளித் தாளாளர் ஜெகதீசன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை, பள்ளி முன்னாள் மாணவர்கள், பெற்றோர் பாராட்டினர்.
பெற்றோர்கள் கூறுகையில், ''இப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. பள்ளியில் படித்த இப்பகுதி மாணவர்களில் பலர் வேலைவாய்ப்பு, தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்'' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
Advertisement
Advertisement