புதுப்பொலிவுடன் வாஸன் கண் மருத்துவமனை

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சிவாஸன் கண் மருத்துவமனை, 'எய்ம்ஸ்' தரத்தில் உயர்த்தப்பட்டு, உலகத்தரமான டாக்டர்கள், அதிநவீன மருத்துவ கருவிகளுடன், மருத்துவ சேவைதுவக்க விழா நேற்று நடந்தது.

மருத்துவமனை இயக்குனரும், கண் விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அனுஷா வெங்கட்ராமன், டாக்டர் ஜெயமணிகண்டன், பொது கண்சிகிச்சை நிபுணர்கள் தர்மலிங்கம், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

'சிவா மெட்ஸ்' மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் உத்ரராஜ், 'டிவி' புகழ் பாலா ஆகியோர் மருத்துவமனை சேவையை துவக்கி வைத்தனர். நகராட்சி தலைவர் சியாமளா, தொழில் வர்த்தக சபை தலைவர் வெங்கடேஷ், சுன்னத் ஜமாத் தக்னியா ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளி வாசலின் தலைவர் ஜாகீர்உசேன் பங்கேற்றனர்.

Advertisement