திருவிழி அம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம்

ஆத்துார் :ஆத்துார் திருவிழி அம்மன் கோவிலில், பால் குடம் ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது.

ஆத்துார், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவில், திருவிழி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று சித்ரா பவுர்ணமியொட்டி மாலை, 5:00 மணியளவில், பால் குடம் ஊர்வலம் துவங்கியது.


மேளதாளத்துடன், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் எடுத்து வந்த பாலை, திருவிழி அம்மன் மீது ஊற்றி அபிேஷகம் செய்தனர். பின், புஷ்ப அலங்காரத்தில் திருவிழி அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement