புற்றுமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

புதுச்சேரி : புற்றுமாரியம்மன் கோவிலில், 4ம் ஆண்டு விழாவையொட்டி, பக்தர்கள் பால் குடம் ஊர்வலம் நடந்தது.

சுப்புராயபிள்ளை சத்திரம் கென்னடி நகர் புற்றுமாரியம்மன் கோவில் உள்ளது. 4ம் ஆண்டு, பால்குட விழா நேற்று நடந்தது. இவ்விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, 9:30 மணியளவில், வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement