தேர் திருவிழா

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் ஜனகவல்லி தாயார் வைகுண்ட வாசகப் பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

கடந்த 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து, தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை துவங்கியது.

பக்தர்கள் தேரை வடம் பிடித்து, ராஜ வீதி வழியாக இழுத்துச் சென்றனர்.திருவெண்ணெய்நல்லுார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் வகையறாக்கள் செய்திருந்தனர்.

Advertisement