அக்கா இறப்பிற்கு வந்த தம்பி குளத்தில் மூழ்கி பலி
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அக்கா விஜயலட்சுமி இறப்புக்கு வந்த தம்பி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் 46, குளத்தில் மூழ்கி பலியானார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் . பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி தொழிலாளி. இவரது சகோதரி விஜயலட்சுமி வத்திராயிருப்பில் வசித்து வந்தார். உடல்நிலை சரியில்லாமல் மே 10ல் இறந்தார். அந்த இறப்பிற்காக தனது தந்தை ஜெயராம் 75, மனைவி சுந்தரவல்லி , குழந்தைகள் உறவினர்களுடன் வத்திராயிருப்பிற்கு வெங்கடேஸ்வரன் வந்தார்.
நேற்று மதியம் 12:00 மணிக்கு சடங்குகளை கழித்து விட்டு தம்பிபட்டி மாவூத்து கோயில் குளத்தில் குளிக்கும்போது வெங்கடேஸ்வரன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
-
போலீஸ் செய்திகள்...
Advertisement
Advertisement