கஞ்சா விற்ற இளைஞர் கைது
சென்னை, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று காலை சைதாப்பேட்டை, பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றவரை பிடித்து சோதனை செய்தனர். இதில், 3 கிலோ கஞ்சா, 104 போதை மாத்திரை வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த திவாகர், 25, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement