பயன்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு நிலையம்
அலங்காநல்லுார், மே 14--
மதுரை மேற்கு ஒன்றியம் அதலை ஊராட்சியில் 5 ஆண்டுகளுக்கு முன் மந்தை பகுதியில் ரூ.9 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.
இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. குடிநீர் சுத்திகரிப்பு செட் அருகே அமைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய அலட்சியத்தால் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் 5 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர்.
இன்று வரை இந்நிலையம் ஒரு குடம் தண்ணீர் கூட வழங்காத நிலையில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
Advertisement
Advertisement