தென்றலாக துவங்கிய தென்மேற்கு பருவக்காற்று
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் தென்மேற்கு பருவக்காற்று கடந்த சில நாட்களாக தென்றலாக வீசுகிறது.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உச்சபட்சமாக கத்தரி வெயிலின் தாக்கமும் அனைவரையும் வாட்டி வதைக்கிறது.
காலை 9:00 மணிக்கு அதிகரிக்கும் வெயில் அதிக வெப்பத்தை கொடுத்து, மதியம் 3:00 மணிக்கு பின் படிப்படியாக குறைகிறது. வெயிலால் ஏற்படும் வெப்பம் இரவில் புழுக்கத்தை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது பெய்த கோடை மழையால் ஓரிரு நாட்கள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவினாலும் மீண்டும் வெயில் தாக்கம் தொடர்கிறது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று ஆண்டிபட்டி பகுதியில் மெல்ல வீச துவங்கி உள்ளது.
வெயிலால் பகலில் வெப்பத்துடன் வரும் காற்று இரவில் குளிர்ந்து தென்றலாக வீசுவதால் புழுக்கம் குறைகிறது. தென்மேற்கு பருவக்காற்று பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!