துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு; கோவையில் பரபரப்பு

கோவை: கோவில்பாளையம் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஹரிஸ்ரீ என்பவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.



திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் ஏற்பட்ட தகராறின் போது, ஹரிஸ்ரீ தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வானில் சுட்டு மிரட்டியுள்ளார். சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஹரிஸ்ரீயை கைது செய்தனர்.


துப்பாக்கியை மீட்க அழைத்துச் சென்றபோது, ஹரிஸ்ரீ தப்பிக்க முயன்று போலீசாரை நோக்கி சுட, தற்காப்பிற்காக போலீசார் அவரது இடது காலில் துப்பாக்கி சுட்டனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.


இதற்கு முன்பு ஹரிஸ்ரீக்கு பீளமேடு காவல் நிலையத்தில் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Advertisement