ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று, 127வது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று, 127வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். வரும், 25ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.

நடபாண்டின் சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவரும் வகையில், ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், ஆர்னமெண்டல் கேல், ஓரியண்டல் லில்லி,பேன்சி, மெரி கோல்டு, ஜினியா, டெல் மூனியம் உட்பட 275 வகையான விதைகள், செடிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, 7.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. அதில், தற்போது வண்ண மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சி அளிக்கின்றன.

மலர் மாடம் உட்பட பல இடங்களில் 30,000 மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சோழர் பரம்பரையின் பெருமை குறித்து விளக்கும் வகையில் ராஜராஜ சோழனின் அரண்மனை, கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, அன்னபறவை படகு போன்ற உருவங்கள், இரண்டு லட்சம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை கவரும் வகையில், தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement