கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
சின்னசேலம்: சின்னசேலம் அருகே மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் தரணிமித்ரா, 20; இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில், பி.ஏ., முதலாமாண்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர், கடந்த 12 ம் தேதி காலை 11:00 மணிக்கு, கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
ஆனால் அவர் கல்லுாரி விடுதிக்கு செல்லவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement