கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

சின்னசேலம்: சின்னசேலம் அருகே மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் தரணிமித்ரா, 20; இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில், பி.ஏ., முதலாமாண்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர், கடந்த 12 ம் தேதி காலை 11:00 மணிக்கு, கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

ஆனால் அவர் கல்லுாரி விடுதிக்கு செல்லவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement