பலா வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை
சென்னை :கடலுார் மாவட்டம் பண்ருட்டியில், பலாப்பழம் அதிகளவில் விளைகிறது. ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, பலாப்பழ அறுவடை நடப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு அறுவடை களைகட்டியுள்ளது.
இங்கிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்து உள்ளது. புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. தினசரி 50 லாரிகளில் பலாப்பழம் வருகிறது.
வரத்து அதிகரிப்பு காரணமாக, மொத்த விலையில் கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு பலாப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பலாப்பழ பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூலுார் விமானப்படைத் தளத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி; முதல்வர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
-
அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்க பா.ஜ., திட்டம்
-
மின்வாரியத்தில் களப்பணியாளர் பற்றாக்குறையால் மன உளைச்சல்; புதிய நியமனம் எப்போது என எதிர்பார்ப்பு
-
மோசமான வானிலையால் வட்டமடித்த விமானம்
-
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகங்களில் விஜிலென்ஸ் ரெய்டு; நுாறு போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல்
Advertisement
Advertisement