மின்மாற்றி தீப்பிடித்து  இரண்டு பைக் நாசம் 

வேளச்சேரி, வேளச்சேரி, காந்தி நகர் பிரதான சாலை, தண்டபாணி தெருவைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன், 36, ராஜேந்திரன், 35. இருவரும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, இவர்களது இருசக்கர வாகனங்களை, வீட்டை ஒட்டி உள்ள மின்மாற்றி அருகில் நிறுத்தினர். நள்ளிரவு, உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றியில் தீ பிடித்தது.

அதில் இருந்து தீ பரவியதால், இரண்டு இருசக்கர வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன. அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement