பிளஸ் 1 மாணவர் துாக்கில் தற்கொலை
திருப்பூர், ; திருப்பூரில், பிளஸ் 1 வகுப்பு மாணவர் துாக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனியைச் சேர்ந்த கண்ணன்- பிரியா தம்பதி, திருப்பூர் ராயபுரத்தில் வசிக்கின்றனர். பனியன் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அவர்கள் இளைய மகன் பாலகணேஷ், 16. மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறையில் தேனிக்குச் சென்ற பாலகணேஷ், நேற்று தான் திருப்பூர் திரும்பினார்.
இந்நிலையில் வேலைக்குச் சென்று விட்டு கண்ணன் வீடு வந்து பார்த்த போது, பாலகணேஷ் வீட்டினுள் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
-
ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை
-
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
-
அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'
Advertisement
Advertisement