ரூ.3.56 லட்சம் 'லஞ்சம்' பறிமுதல் டவுன் பஞ்., உதவியாளர் சிக்கினார்

சேலம், கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், செயல் அலுவலராக இருப்பவர், திருச்சியை சேர்ந்த பிரகந்த நாயகி. அங்கு உதவியாளராக, சேலம், வீராணத்தை சேர்ந்த ஆறுமுகம், 30, பணியாற்றினார். இவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகார்கள் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், சில நாட்களாக கண்காணித்தனர்.
நேற்று மாலை, சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள தணிக்கை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஆறுமுகத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார், பிடித்து விசாரித்தனர்.
அப்போது, செயல் அலுவலருக்காக, 3.56 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை மாநகராட்சி பின்பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் கொடுத்து வைத்திருப்பதாகவும் கூறினார். இதனால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஆறுமுகத்திடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
Advertisement
Advertisement