தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


சேலம், சேலம், முகமது புறா பகுதியை சேர்ந்தவர் இம்ரான், 34. அஸ்தம்பட்டி, அய்யனார் தோட்டத்தை சேர்ந்தவர் முஸ்தபா, 30.
இருவரும் சேர்ந்து கடந்த ஏப்., 18ல், கிச்சிப்பாளையம், நாராயண நகரில் வசிக்கும் தம்பதி வீட்டில் நுழைந்து, அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, 7 பவுன் நகைகள், 2 மொபைல் போன்களை பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகாரில், கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, இம்ரான், முஸ்தபாவை கைது செய்தனர்.
இம்ரான், முஸ்தபா ஆகியோர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதனால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார். முஸ்தபா மீது, ஏற்கனவே, 4 முறை குண்டாஸ் பாய்ந்துள்ளது.

Advertisement