இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் 7 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு



சேலம், சேலம் மாநகரில் பணியாற்றிய, 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டனர். அதன்படி அன்னதானப்பட்டி கண்ணய்யன், பள்ளப்பட்டி நெப்போலியன், கொண்டலாம்பட்டி ராணி ஆகியோர், கோவை மாநகருக்கு மாற்றப்பட்டனர்.

பதவி உயர்வு பெற்று சேலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பழனிசாமி, கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவுக்கும், சந்திரமோகன் என்பவர் பள்ளப்பட்டிக்கும் நியமிக்கப்பட்டனர்.
ேஷாபனா அழகாபுரம்; பழனி இரும்பாலை; ரவிக்குமார் அன்னதானப்பட்டி; யுவராஜ் அஸ்தம்பட்டி; ருக்மணி செவ்வாய்பேட்டை குற்றப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்தம்பட்டி தவமணி அழகாபுரத்துக்கும், அங்கிருந்த காந்திமதி அஸ்தம்பட்டிக்கும், அழகாபுரம் குற்றப்பிரிவு விஜயேந்திரன் வீராணம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நேற்று, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பிறப்பித்தார்.

Advertisement