பைக் பெட்டியை திறந்து நகை, ரூ.57,000 திருட்டு
தலைவாசல், பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, நெற்குணத்தை சேர்ந்த விவசாயி ராஜ்மோகன், 50. இவர், வீரகனுாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 4 பவுன் நகையை அடமானம் வைத்திருந்தார்.
நேற்று மதியம், 2:00 மணிக்கு, அந்த நகையை மீட்டார். பின் வீரகனுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, 'சைன்' பைக்கில், அதன் பெட்டியில் வைத்துக்கொண்டார். அத்துடன், 57,000 ரூபாயை வைத்துள்ளார். பின் பைக் சாவியை எடுக்காமல், குளிர்பான கடைக்கு சென்றார். மீண்டும் வந்தபோது, பைக் பெட்டி திறந்து கிடந்தது. உள்ளே நகை, பணம் இல்லை. அவர் புகார்படி, வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
-
ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை
-
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
-
அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'
Advertisement
Advertisement