சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதித்த அச்யுதா பள்ளி

-திண்டுக்கல்,: சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் அச்யுதா பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சாதனை படைத்துள்ளனர்.

மாணவர் மங்களேஷ் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். வர்ஷினி 492 மதிப்பெண்களுடன் 2ம் இடம், அஸ்மிகா ரக்சனா 484 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பிடித்துள்ளனர். சர்னி பிரியா, சம்ஸ்திதா 483, ஜெசிகா ஸ்ரீ 482 மதிப்பெண்களுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.தமிழில் 8 பேர், கணிதத்தில் 2 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இம்மாணவர்களை பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம், பாராட்டி ஊக்கத் தொகை வழங்கினர்.பள்ளி முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ஞானபிரியதர்ஷினி, பத்மநாபன், ராஜசுலோச்சனா, வித்யா, பிரபா, மணிமேகலை, விஜயசாந்தி, மகேஸ்வரி, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்ரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ஆசிரியர்கள், மேலாளர் பிரபாகரன், ஜான் கிறிஸ்டோபர், அலுவலக பணியாளர்கள், சக மாணவர்கள் வாழ்த்தினர்.

Advertisement