சித்தராமையாவுக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம்

கோலார்: கோலார் புறநகரின் டமக்காவில் உள்ள ஜாலப்பா வெள்ளி விழா மண்டபத்தில், தேவராஜ் அர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. முதல்வர் சித்தராமையாவின் சமூக சேவையை கருதி, அவருக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்குவதாக துணை வேந்தர் நாகராஜ் அறிவித்தார்.

இது குறித்து, அவர் பேசியதாவது:

முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, கல்வி நிறுவன நிர்வாக வாரியத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. சித்தராமையா இரண்டு முறை முதல்வரானவர்; 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர். அனைத்து சமுதாயத்தினருக்கும், வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி, புதிய சகாப்தம் படைத்துள்ளார்.

இதற்கு முன் எந்த அரசுகளும், இது போன்ற பணிகளை செய்தது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே, சித்தராமையாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்திருக்க வேண்டும். இப்போது அதற்கான முடிவை எடுத்தோம்.

டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து, முதல்வர் சித்தராமையாவிடம் கூறவில்லை. கோலாருக்கு அவர் வரும் போது, டாக்டர் பட்டம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement