படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி

விழுப்புரம்: ''பா.ம.க., மாவட்ட செயலாளர்களுக்கு 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்தேன்'' என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், இன்று (மே 16) விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். பா.ம.க, செயல் தலைவர் அன்புமணி கூட்டத்திற்கு வரவில்லை. இதற்கிடையே நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: 50 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். அவர்களின் ஆலோசனையை கேட்டேன்.
களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. பா.ம.க.வில் கோஷ்டி மோதல் இல்லை. கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான கூட்டம் நடந்தது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி நிச்சயம்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
வாசகர் கருத்து (20)
panneer selvam - Dubai,இந்தியா
16 மே,2025 - 17:17 Report Abuse

0
0
Reply
Rengaraj - Madurai,இந்தியா
16 மே,2025 - 16:38 Report Abuse

0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
16 மே,2025 - 15:59 Report Abuse

0
0
Reply
Srinivasan Srisailam Chennai - Cheenai,இந்தியா
16 மே,2025 - 15:55 Report Abuse

0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
16 மே,2025 - 15:48 Report Abuse

0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
16 மே,2025 - 15:47 Report Abuse

0
0
Reply
kannan - Bangalore,இந்தியா
16 மே,2025 - 13:42 Report Abuse

0
0
Reply
PALANISWAMY BALAKRISHNAN - tirupur,இந்தியா
16 மே,2025 - 13:22 Report Abuse

0
0
Reply
PALANISWAMY BALAKRISHNAN - tirupur,இந்தியா
16 மே,2025 - 13:18 Report Abuse

0
0
Reply
Agni Kunju - Singapore,இந்தியா
16 மே,2025 - 13:13 Report Abuse

0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
-
சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: டில்லியில் வங்கதேசத்தினர் 13 பேர் கைது
-
மீண்டும் புதிய கொரோனா அலையா; சிங்கப்பூர், ஹாங்காங்கில் தொற்று அதிகரிப்பு
-
பாகிஸ்தானை ஆதரித்ததால் வந்த வினை: அஜர்பைஜான், துருக்கியுடன் உறவை முறிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவிப்பு
-
பாக்.,கிற்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசின் அடுத்த திட்டம்!
-
இலங்கைக்கு 600 லிட்டர் பெட்ரோல் படகில் கடத்தல்: நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் கைது
-
17 கிராமங்களுக்கு கிடைத்தது மின் வசதி; சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்புக்கு கை மேல் பயன்!
Advertisement
Advertisement