10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியாகின்றன.
கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
இன்று காலை 9:00 மணிக்கு பத்தாம் வகுப்பு, மதியம் 2:00 மணிக்கு பிளஸ் 1 முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு அறியலாம்.
வாசகர் கருத்து (1)
Ajay - ,இந்தியா
16 மே,2025 - 07:59 Report Abuse

0
0
Reply
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
Advertisement
Advertisement