இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக காதர் மொய்தீன்

சென்னை : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தல்; ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில், இந்திய ராணுவம் காட்டிய முன்மாதிரியான தொழில்நுட்பம், தைரியம், கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவிப்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. கட்சியின் தேசியத் தலைவராக காதர் மொய்தீன், மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement