போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
விருதுநகர் : பொள்ளாச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மதியம் சிவகாசிக்கு புறப்பட்ட அரசு பஸ்சை (TN 67 N 1548) விருதுநகர் வடமலைக்குறிச்சி டிரைவர் அருள் மூர்த்தி ஓட்டினார். அந்தியூர் டோல்கேட் அருகே வந்த போது டிரைவர் மது போதையில் இருப்பதை அறிந்த பயணிகள் பஸ்சை நிறுத்தி போலீசுக்கு தெரிவித்தனர்.
அருள் மூர்த்தியை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாற்று பஸ் ஏற்பாடு செய்து பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். போதையில் பஸ்சை ஓட்டிய அருள்மூர்த்தி, கண்டக்டர் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் துரைசாமி உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Advertisement
Advertisement