மே 29, 30 தேதிகளில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.



சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.


மே 29ம் தேதியன்று காலை, மாலை என்று நடைபெறும் கூட்டத்தில் 42 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.


மே 30ம் தேதியன்று காலை, மாலை என நடைபெறும் கூட்டத்தில் 40 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டங்களில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும்.

Advertisement