வணிக திருவிழா பரிசளிப்பு விழா

புதுச்சேரி: சுற்றுலாத் துறை சார்பில், வணிக திருவிழா நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
வணிக திருவிழா புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனம், ஆகிய பிராந்தியங்களில் நடந்தது. இதில் புதுச்சேரியில் 230 வணிக நிறுவனங்களும், காரைக்காலில் 159 வணிக நிறுவனங்களும் மாஹேயில் 35 வணிக நிறுவனங்களும், ஏனாமில் 55 வணிக நிறுவனங்களும் மொத்தம் 479 வணிக நிறுவனங்கள் இந்த விழாவில் பங்கு பெற்று 34 லட்சம் பரிசு கூப்பன்களை வாடிக்கையாளர்களுக்கு வாங்கிய பொருட்களின் மதிப்பிற்கேற்ப இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது.
கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற குலுக்கல் முடிவில் முதல் பரிசாக 34 மாருதி கார்களும், இரண்டாம் பரிசாக 68 ஹீரோ ஸ்கூட்டர்களும், மூன்றாம் பரிசாக 340 கிரைண்டர்களும், நான்காம் பரிசாக 340 மிக்ஸிகளும் ஐந்தாம் பரிசாக 3400 எலக்ட்ரிக் கெட்டில்களும், ஆறாம் பரிசாக 34,000 எவர்சில்வர் டோப் செட்டுகளும் ஏழாம் பரிசாக 3400 மில்க் குக்கர்களும் மொத்தம் 72,142 பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இதற்கான பரிசளிப்பு விழா புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று நடந்தது.
விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், சிவசங்கரன் எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது: சொல்கிறார் டிரம்ப்!
-
அமலாக்கத்துறை ரெய்டு: தொழிலதிபர் 'எஸ்கேப்'?
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
சென்னையில் 2 நாட்கள் புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தேர்வில் முறைகேடு புகார் அதிகாரிகள் விசாரணை
-
500 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது