ஸ்ரீ சத்குருநாத முனிவரின் 106வது ஆண்டு குருபூஜை
கோத்தகிரி: கோத்தகிரி நடுஹட்டி கிராமத்தில் ஸ்ரீ சத்குருநாத மகா முனிவரின், 106 வது ஆண்டு குருபூஜை சிறப்பாக நடந்தது.
ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் மரபில், ஒன்பதாவது முனிவராக அவதரித்த ஸ்ரீ ஸ்ரீ சத்குருநாதர் மகா முனிவரின் குருபூஜை திருவிழா நடுஹட்டி கிராமத்தில் நடந்தது.
காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீ சத்குரு நாதர் சமய கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து, 11:00 மணிக்கு, மந்திர உச்சாடனை, சிறப்பு பூஜை, தேவார பாடல் பஜனை இடம் பெற்றது. பகல், 1:00 மணிக்கு, ஸ்ரீ சற்குருநாதர் மகா முனிவரின் திரு உருவப்படம் வீதி உலா நடந்தது.
தொடர்ந்து, 2:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல், 3:00 மணிக்கு, பிருந்தாவன ஆடல் பாடல் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மங்கள ஆரத்தியுடன், விழா நிறைவடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி; குவிகிறது பாராட்டு!
-
பா.ம.க.,வில் நெருக்கடிக்கு சுமுக தீர்வு வரும்: ஜி.கே.மணி நம்பிக்கை
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
Advertisement
Advertisement