கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; உயிர் தப்பிய நோயாளிகள்!

டேராடூன்: கேதார்நாத்தில் எய்மஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. நோயாளிகள், டாக்டர் மற்றும் விமானி காயமின்றி உயிர் தப்பினர்.



உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, எய்மஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.


விமானி சாதுர்யமாக செயல்பட்டதால், நூலிழையில் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த நோயாளிகள் 3 பேர், டாக்டர், விமானி என மொத்தம் 5 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

''அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்'' என கமிஷனர் வினய் சங்கர் தெரிவித்தார்.

Advertisement