குண்டேரிபள்ளத்தில் 5.80 மி.மீ., மழை பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் குண்டேரிபள்ளத்தில், 5.80 மி.மீ., மழை பதிவானது. வரட்டுபள்ளம் அணையில், 5 மி.மீ., சத்தியில், 4 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை பெய்வதற்கான அறிகுறி காணப்பட்டும் மழை பெய்யவில்லை. மழைக்கு அந்தியூரில் ஒரு குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்தது.
வரும் 21ல் 'உ.தேடி, உ.ஊரில்'
ஈரோடு, மே 18
சத்தி தாலுகாவில் வரும், 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம் நடக்க உள்ளது. அன்று மாலை, 4:30 முதல் மாலை, 6:00 மணி வரை சத்தி தாலுகா அலுவலகத்தில் மக்களிடம், கலெக்டர் குறை கேட்டறிந்து, மனுக்களை பெறுகிறார்.

Advertisement