வரட்டுபள்ளத்தில் 51 மி.மீ., மழை

ஈரோடு,: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்ய துவங்கி-யுள்ளது. நேற்று முன்தினமும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக வரட்டு-பள்ளம் அணையில், 51 மி.மீ.,
மழை பதிவானது.


மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-14.60, மொடக்குறிச்சி-25, கொடுமுடி-6, பெருந்துறை-8, சென்னிமலை-16, பவானி-19.20, கவுந்தப்-பாடி-11.20, அம்மாபேட்டை-20, கோபி-16.20, எலந்தகுட்டை மேடு-9, கொடிவேரி அணை-19, குண்டேரிபள்ளம் அணை-10.20, நம்பியூர்-16, சத்தி-18.30, பவானிசாகர் அணை-7.80, தாளவாடி-4.20.

Advertisement