திருவிழாவில் முயல் வனத்துறை கண்காணிப்பு

ஆத்துார்: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி, வீரகனுார், சொக்கனுார் பகுதிகளில் நேற்று, மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில், 'பாரி வேட்டை' எனும் முயல் வேட்டை நடத்தக்கூடாது என, வனத்துறையினர் எச்சரித்திருந்தனர்.


மேலும் வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி தலைமையில் ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட காப்புக்காடு, சமூக காடுகள் வனச்சரகர்கள் குழுவினர், பாதுகாப்பு, கண்கா-ணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement