சர்வதேச அருங்காட்சியக தினம் மாமல்லையில் களைகட்டிய சுற்றுலா

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள் உள்ளன. இதை, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
நேற்று சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, நாடு முழுதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் நினைவிடங்களை, பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என, மத்திய கலாசார அமைச்சகம் அறிவித்திருந்தது.
இதனால் நேற்று, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
இதில் இலவசமாக அனுமதிக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், வெண்ணை உருண்டை பாறை, கலங்கரை விளக்கம் ஆகியவற்றுடன், எப்போதும் கட்டணமில்லாத அர்ஜுனன் தபசு, கடற்கரை உள்ளிட்டவற்றையும் சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர். குழுவாக நின்று, புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
மேலும்
-
இலவச பயணத்திற்கு மறுப்பு; முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்; 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கண்டக்டர்
-
அமைச்சருக்கு 'கோ பேக்' சொன்ன தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்
-
8 மாவட்டங்களில் இன்று கனமழை
-
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
-
வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
-
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.10 லட்சம் மோசடி