காருக்குள் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு
அமராவதி : ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் அமர்ந்து குழந்தைகள் 4 பேர் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கதவு மூடிக் கொண்டு திறக்க முடியாததால் 4 பேரும் உயிரிழந்தனர்.10 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளும் நீண்ட நேரம் காருக்குள் சிக்கி, மூச்சு திணறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உதய் 8, சாருமதி 8, சாரிஷ்மா 6, மானஸ்வி 6, என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். அப்போது குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
3 பேர் பலி: ஆந்திராவின் சித்துார் மாவட்டத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூன்று குழந்தைகள் மூழ்கி இறந்தனர்.
இறந்தவர்கள் ஷாலினி 5, அஸ்வின் 6, கவுதமி 8, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்
-
அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்!
-
அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
-
குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் இடிப்பு!
-
இன்ஜி., படிப்புகளுக்கு 2 லட்சம் விண்ணப்பம்
Advertisement
Advertisement