தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
புதுச்சேரி : கோரிமேடு போலீஸ் நிலையத்தில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை, ஆத்தங்கரை வீதியை சேர்ந்த ராஜ்குமார், 24; என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், ஜாமினில் வெளி வந்த ராஜ்குமார், அதன் பின் அந்த வழக்கு தொடர்பாக இதுவரையில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளார்.
மேற்படி வழக்கு தொடர்பாக பதிலளிக்க வரும் ஜூன் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு ராஜ்குமார் குற்றவியல் நடுவர் நீதிபதி முன்னால் ஆஜராக வேண்டும் என, புதுச்சேரி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நாளில் எகிறிய தங்கம் விலையால் பெண்கள் அதிர்ச்சி; சவரனுக்கு ரூ.1760 உயர்வு
-
தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
குண்டு காயத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி: ஐ.எஸ்.ஐ., பாதுகாப்புடன் சிகிச்சை
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
Advertisement
Advertisement