மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பலி
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மேலபட்டியில் மின் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை துணை மின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக இருந்த அண்ணா நகரை சேர்ந்த சரவணன் 28, சரி செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சரவணன் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இறந்த சரவணன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோல்கட்டாவில் ட்ரோன் பறந்ததா போலீசார் விசாரணை
-
கர்நாடகா உள்துறை அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 750 யாத்ரீகர்கள் தேர்வு: வெளியுறவு அமைச்சகம்
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; குழந்தைகள் 4 பேர் பலி; 38 பேர் படுகாயம்
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!
Advertisement
Advertisement