கார்கள் மோதிய விபத்தில் வியாபாரி பலி

--பெரியகுளம் : தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த நூல் வியாபாரி நாகேந்திரன் 48. திண்டுக்கல்லிருந்து தேனி நோக்கி காரை ஓட்டிச் சென்றார். பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி -சருத்துப்பட்டி பைபாஸ் ரோடு விலக்கு அருகே வந்த போது கேரளாவிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. இதில் நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் சிக்கிய நாகேந்திரனை பெரியகுளம் தீயணைப்பு துறையினர் காரை உடைத்து உடலை மீட்டனர்.
எதிரே மோதிய காரில் சென்ற டிரைவர் நிகில் 25. அவரது நண்பர் விஷ்ணு 24, ஆகியோர் காயம் ஏற்பட்டது. நாகேந்திரன் உடல் மற்றும் காயம்பட்டவர்கள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தென்கரை போலீசார் நிகிலிடம் விசாரிக்கின்றனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோல்கட்டாவில் ட்ரோன் பறந்ததா போலீசார் விசாரணை
-
கர்நாடகா உள்துறை அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 750 யாத்ரீகர்கள் தேர்வு: வெளியுறவு அமைச்சகம்
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; குழந்தைகள் 4 பேர் பலி; 38 பேர் படுகாயம்
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!
Advertisement
Advertisement