தோட்டக்கலைதுறை மானிய திட்ட பயனாளிகள் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி : புதுச்சேரி தோட்டக்கலைத்துறை திட்டத்தில் 100 சதவீதம் மானியம் பெறும் பயனாளிகள் பட்டியலில் ஆட்சேபனை இருந்த தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை இணை வேளாண் இயக்குநர் சண்முகவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கூடுதல் வேளாண் இயக்குனர் தோட்டக்கலை அலுவலகம் மூலம் 2024-25ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த தோட்டக்கலை திட்டத்தின் 'என் வீடு என் நலம்' உட்கூறின் கீழ் தோட்டக்கலை தொகுப்பு 100 சதவீதம் மானியத்தில் பெறக்கோரி விண்ணப்பித்திருந்த குழுக்களின் உறுப்பினர், பயனாளிகளின் விவரங்கள் கடந்த 19ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை சமுதாய தணிக்கைக்காக புதுச்சேரியில் உள்ள சம்மந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் பயனாளிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் ஆட்சேபனை இருப்பின் வரும் 28ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குனர் தோட்டக்கலை அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கோல்கட்டாவில் ட்ரோன் பறந்ததா போலீசார் விசாரணை
-
கர்நாடகா உள்துறை அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 750 யாத்ரீகர்கள் தேர்வு: வெளியுறவு அமைச்சகம்
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; குழந்தைகள் 4 பேர் பலி; 38 பேர் படுகாயம்
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!