விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்திற்கு தயார்: இஸ்ரோ

புவனேஸ்வர்: பிஎஸ்எல்வி-சி 61 /இஓஎஸ் -09 திட்டம் தோல்வி அடைந்தது தொடர்பாக தேசிய அளவிலான குழு விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் நாராயணன், 2027ல் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்திற்கு முழு வீச்சுடன் தயாராகி வருவதாக தெரிவித்தார்.
புவி கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு பணிகளுக்காக இஓஎஸ்-09 (ரிசாட் -1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் கட்நத 18 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியில் முடிந்தது.
இது தொடர்பாக புவனேஸ்வரில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: பிஎஸ்எல்வி -சி 61 திட்டம், 3வது நிலையின் போது, ' சேம்பர் ' அழுத்தத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 4வது நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், அது தோல்வியில் முடிந்தது. இதற்கான காரணம் குறித்து தேசிய அளவிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
2025 ம் ஆண்டு இன்னும் முக்கியமான ஆண்டு. சந்திரயான்-4, சந்திரயான்-5 உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. 2027 ல் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு இந்தியரை அனுப்பி வைக்கும் திட்டத்துடன், உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்காக இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



மேலும்
-
சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு
-
அமெரிக்காவுடன் மோதலா? இல்லை என்கிறார் இஸ்ரேல் பிரதமர்
-
நான் தான் செய்தேன்: மீண்டும் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி டிரம்ப் பேச்சு!
-
தமிழகம், புதுச்சேரியில் 27 வரை மிதமான மழை
-
கைதிகளிடம் ஜாதி கேட்கக்கூடாது என்ற உத்தரவு சாதகமா, பாதகமா? சிறை காவலர்கள் சொல்வது என்ன
-
மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ நுழைவுவாயில் அமைக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு