ஜோஸ் ஆலுக்காஸில் திருமண நகை திருவிழா

சென்னை:ஜோஸ் ஆலுக்காஸ், திருமண நகைகளுக்கான சிறப்பு சலுகைகளுடன், 'சுப மாங்கல்யம்' திருமணநகை திருவிழாவை அறிவித்துள்ளது.

இந்த சீசனில் சிறப்பு சலுகையாக, தங்கம் வாங்கும் போது, அதே எடைக்கு நிகரான வெள்ளி இலவசமாக வழங்கப்படும். மேலும், பழைய நகைகளை 'எக்ஸ்சேஞ்' செய்யும் போது, எப்போதும் இல்லாத, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. தங்க நகைகளுக்கு சேதாரத்தில், 30 சதவீதம் தள்ளுபடி, வைர நகைகளுக்கு, 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், பிளாட்டினம் நகைகளுக்கு, சேதாரத்தில், 15 சதவீதம் தள்ளுபடி, வெள்ளி நகைகளுக்கு சேதாரம் இல்லை என்ற சலுகையும் வழங்கப்படுகிறது.

இது குறித்து, ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத் தலைவர், ஜோஸ் ஆலுக்காஸ் கூறுகையில், ''ஒவ்வொரு சீசனிலும் ஜோஸ் ஆலுக்காஸில் அதிநவீன நகைகளையும், வாடிக்கையாளர்கள் தம் பணத்திற்கு சிறந்த மதிப்பை பெறக்கூடிய சலுகைகளையும், எப்போதும் முடிந்த வரை வழங்க முயற்சிக்கிறோம். இந்த சீசனிலும் அதேபோல் வழங்கி இருக்கிறோம்'' என்றார்.

Advertisement