செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சாமி வீதியுலா

புதுச்சேரி: குருவப்பநாயக்கன்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பிரமோற்சவ விழாவில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.
வில்லியனுார் அடுத்த குருவப்பநாயக்கன்பாளையம், செல்லமுத்து மாரியம்மன் கோவில் 18 ம் ஆண்டு பிரமோற்சவம், கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு சுவாமி வீதி உலா நடந்தது.
நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. இரவு செல்லமுத்து மாரியம்மன், பிரத்தியங்கராதேவி, வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு அம்மன் காமதேனு வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வரும் 27ம் தேதி செடல் உற்சவம், 28 ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, விழா குழு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மேலும்
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி