மின்சாரம் தாக்கி மாணவி பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த நன்னாடு புது காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார்; சென்னை புளியந்தோப்பில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனுசுயா, 14; அங்குள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு முடித்து, 10ம் வகுப்பு செல்ல இருந்தார். கோடை விடுமுறைக்காக, நன்னாட்டில் உள்ள பாட்டி மங்காத்தா வீட்டிற்கு, அனுசுயா வந்தார்.
நேற்று மாலை பாட்டி மங்காத்தா கூறியதால், அனுசுயா மின் மோட்டார் சுவிட்ச் போட்டபோது, மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
-
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
கேரளாவில் தொடரும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
Advertisement
Advertisement