உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் சிந்தூர்; உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

புதுடில்லி: "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் அமித்ஷா பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதி முகாம்களை மட்டுமே அழித்தோம். பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளையும் இந்தியா குறிவைத்து தாக்கவில்லை.
உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல நாடுகள் பதில் அளித்துள்ளன. பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த பதில் அவற்றில் மாறுபட்டது.
தகுந்த பதிலடி
பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு படையினர் மிகச்சிறந்த முறையில் பதிலடி கொடுத்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு உலகமே பாராட்டுகிறது. நான் ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். நமது நாடு பல தசாப்தங்களாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது.
பஹல்காமில், பயங்கரவாதிகள் நம் மக்களை கொடூரமாக கொன்றனர். பிரதமர் மோடி தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார். அந்த பதில் இன்று தெளிவாகத் தெரிகிறது. முழு உலகமும் இப்போது நமது ஆயுதப் படைகளையும், அவர்களின் தாக்குதல் திறன்களையும் பாராட்டுகிறது.
துல்லியமாக தாக்குதல்
பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியமாக தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டுகிறேன். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


மேலும்
-
சாய் சுதர்சன், கருண் எதிர்பார்ப்பு: இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில்
-
ஆபரேஷன் சிந்தூர் : இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு
-
இங்கிலாந்து பவுலர்கள் அசத்தல்: 265 ரன்னுக்கு சுருண்டது ஜிம்பாப்வே
-
வெள்ளி வென்றார் ரைசா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
-
ஓய்வு பெறுகிறார் மாத்யூஸ்
-
'மேட்ச் ரெப்ரி' ஸ்ரீநாத்: உலக டெஸ்ட் பைனலுக்கு