அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை
விழுப்புரம்: அரசு அலுவலக பெயர் பலகைகளில், தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் விழுப்புரம் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
அரசு அலுவலகங்களில், தமிழிலும், ஆங்கிலத்திலும் முறையே 5:3 என்ற விகிதத்தில் அமையலாம் என தமிழ் வளர்ச்சித் துறை அரசாணையில், தமிழுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்கிறது.
தலைமை செயலகத்தில், அயல்நாட்டினரும் வந்து செல்லும் முதல்வரின் அறையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பெயர் பலகை அமைந்துள்ளது. ஆனால், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஆங்கிலத்தில் பெயர் பலகை உள்ளது.
விழுப்புரத்தில் பல அரசு அலுவலகங்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் அரசின் கொள்கையை, அரசு அலுவலகங்களில் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு
-
போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்