போதை அண்ணனை கொன்ற தம்பி சரண்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரியை சேர்ந்தவர் அஜித்குமார், 27. இவரது தம்பி ராம்குமார், 25; டூ - வீலர் மெக்கானிக். இவர்களது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தாய் விஜயா, இளைய மகள் வீட்டில் திருப்பூரில் வசிக்கிறார்.
அஜித்குமார் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு, வீட்டிலும், தெருவிலும் தகராறு செய்துள்ளார். அஜித்குமாரை பலமுறை, ராம்குமார் கண்டித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த அஜித்குமாருக்கும், ராம்குமாருக்கும் ஏற்பட்ட தகராறில், ராம்குமார், அஜித்குமாரை அடித்து கீழே தள்ளியதில் தலையில் அடிபட்டது. பின், வீட்டில் இருந்த ஒயரால் கழுத்தை நெரித்து கொன்றார்.
பின், அஜித்குமார் உடலை வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் போட்டு விட்டு, ராம்குமார் துாங்கினார். நேற்று போலீசில் சரணடைந்து விபரத்தை கூறியுள்ளார். நடுக்காவேரி போலீசார் ராம்குமாரை கைது செய்தனர்.
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு
-
போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்