மீன்பாசி குத்தகை பெற அழைப்பு 

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்திராயிருப்பு குணவந்தனேரி, எஸ்.கொடிக்குளம், தாமரைக்குளம், ராஜபாளையம் மருங்கூர், குறவன்குளம் ஆகிய ஐந்து கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையை 3 ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளத் துறை உதவி இயக்குநரால் வரவேற்கப்படுகின்றன.

ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டெப்போ பின்புறம், விருதுநகர்-626 001 என்ற முகவரியில் இயங்கிவரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04562-244 707, என்றார்.

Advertisement