மெட்ரோவில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர் கைது

பெங்களூரு:மெட்ரோ ரயிலில் பயணித்த இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, 'மெட்ரோ சிக்ஸ்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் வெளியிட்டார். அந்த பக்கத்தில் 13 ஆபாச வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். இன்ஸ்டாகிராம் கணக்கை 60,00 பேர் பின்தொடர்ந்து இருந்தனர்.
இளம்பெண்கள் ஆபாச வீடியோ வெளியிடப்பட்டது, பயணியர் மத்தியில் கொந்தளிப்பை கிளப்பியது. இதனால் ஆபாச வீடியோக்களை பதிவிட்டவரே அதை அழித்தார். வீடியோ பதிவிட்டவர் மீது பனசங்கரி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், வீடியோவை பதிவிட்டவர் ஹாவேரியை சேர்ந்த திகந்த், 30 என்பதும், அவர் பெங்களூரு பீன்யாவில் வசிப்பதும் தெரிந்தது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும்
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்